மட்டக்களப்பில் செவிப்புலனற்ற சிறுவர்களைப் பராமரிக்கும் வாழ்வோசை நிறுவனத்தின் சிறுவர் தின ஊர்வலம்


(சிவம்)
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு செவிப்புலனற்ற சிறுவர்களைப் பராமரிக்கும் வாழ்வோசை நிறுவனத்தின்  ஊர்வலம் இன்று (01) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு செலான் வங்கியின் அனுசரணையில் ஆரம்பமான ஊர்வலம் தாண்டவன்வெளி, திருமலை வீதி, பன்சாலை வீதி வழியாக நகர காந்திப் பூங்காவரை சென்றடைந்தது.

காந்திப் பூங்காவில் சிறுவர்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.