கல்வி அமைச்சு நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டம் உடற்பயிற்சி போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பியனாகியது.
ஒன்பது மாகாணங்களில் இருந்தும் வெற்றி பெற்ற தலா 3 பாடசாலைகள் இப்போட்டிகளில் பங்கு கொண்டிருந்தன.
வியாங்கொட் ஆசிரியர் கல்லூரியில் இப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமையும் (02.10.2015), சனிக்கிழமையும் (03.10.2015) நடத்தப் பெற்றது.
இப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தேடித்தந்த மாணவிகளைப் பாராட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை 05.10.2015 கல்லூரி சமுகத்தினரால் நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பார் எம்.ரீ.ஏ.நிசாம் பிரதம அதிதியாகவும். திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் கௌரவ விருந்தினராகவும், கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி, உதவிக்கல்வி பணிப்பாளர் பி.எல்.தர்மதிலக விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
முதலிடம் பெற்ற மாணவிகளும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பிரமுகர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.