கொக்கட்டிச்சோலை வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு


(படுவான் பாலகன்) அகில இலங்கை ஆசிரியர் தினத்தை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது விபுலானந்த அடிகளின் உருவத்திற்கு மாலை அணிவித்து அவரது ஆசிர்வாதத்தை பெற்று பின்பு மாணவர்களினால் ஆசிரியர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களது ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதன் பின்பு பழைய மாணவர்சங்க தலைவர் அவர்களினாலும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அவர்களினாலும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டது. அதை தொடர்ந்து பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் அவர்களின் சிறுஉரைகளும் இடம்பெற்றது.