வின்சென்ற் தேசிய பாடசாலை பாடுமீன் சமர் கிண்னத்தை வென்றது

(வரதன்)

 6 வது பாடுமீன் சமர் இன்று காலை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது இம்முறை வின்சென்ற் தேசிய பாடசாலை பாடுமீன் சமர் கிண்னத்தை வென்றது

வெற்றி இலக்கான 119 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய வின்சென்ற் அணியினர் 17 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 103ஓட்டங்களைப் பெற்ற வேளையில் கடும் மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டதை தெரிவித்ததையடுத்து ஓட்ட சராசரி வீதத்தின் அடிப்படையில் வின்சென்ற் தேசிய பாடசாலை வெற்றி பெற்றதாகபோட்டி நடுவர்களினால் அறிவிக்கப்பட்டது.

 நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசி;களையும் வழங்கி வைத்தார்.வெற்றி பெற்ற அணியினர் மைதானத்திலிருந்து பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டமை குறிப்படத்தக்கது.