சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறுவன் கைது

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல்  துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய   சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றிற்குள் தனியாக அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.