மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்


(சிவம்)

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டம் -306 சி 2 அமைப்பினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் தலைவர் கலாநிதி லயன் கே. செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

கழகத்தின் செயலாளர் லயன் எம். மனோகரன், பொருளாளர் கலாநிதி  லயன் எம். கனகரட்ணம், கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் தலைவர் லயன் எஸ். ஜெயபாலன், ஊடகத்தலைவர் லயன் வி.ஆர். மகேந்திரன் மற்றும் லயன் எஸ். குலதீபன் ஆகியோர் கலந்து கொண்டு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தனர்.

விநாயகர் வித்தியாலயம் - களுவாஞ்சிக்குடி மற்றும் சிவன் பாலர் பாடசாலை- குருக்கள்மடம் ஆகிய பாடசாலைகளிலும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.