வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளி அறுவடை

(மண்டூர்.ஷமி) மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.

தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு மாதகாலத்துக்குட்பட்ட மரவள்ளி இனம் செய்னைபண்ணியதாகவும் அதன் விளைவு சிறந்த விளைச்சலை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஆரம்ப நடுகை தொடக்கம் அறுவடை செய்யும் வரை எவ்வித பசளைகள் இன்றி பராமரிக்கப்பட்டுள்தாகவும் இயற்கை பசளைகளைக்கொண்டு பராமரித்ததாகவும் தோட்ட உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான வீட்டுத்தோட்ட செய்கையாளர்களை இனம் கண்டு இவர்களை ஊக்குவிப்பதன் மூலம் வீட்டுத்தோட்ட செய்கையில்  அதிக இலாபத்தை பெறமுடியும்.