இலங்கையில் 60 வீதமான பெண்கள் வீடுகளில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம்யோகமலர் அஜித்குமார்

(சிவம்)
பெண்கள் உரிமை, குடும்ப வன்முறை மற்றும் அடிப்படைச் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வுகளைமட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மேற்கொள்கின்றனஎன காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் தலைவி திருமதி யோகமலர் அஜித்குமார்தெரிவித்தார்.

சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை நினைவுகூரும் முகமாக  பால்நிலைவன்முறைக்கெதிராக செயல்படுவோம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பட்டி அணிவிக்கும் நிகழ்வு புதன்கிழமை  (25)  மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் 60 வீதமான பெண்கள் வீடுகளில்  பாலியல் ரீதியான துஸ்பிரயோகம்இ உடல் உளரீதியான துஸ்பிரயோகம், நிதி மற்றும் நடமாட்டம் தொடர்பான கட்டப்பாடுகள் போன்றவன்முறைகளினால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் மூலம் தெரிகின்றன. 1998 ஆம் ஆண்டுநவம்பர் 25 ஆம் திகதி சர்வதேச பெண்களுக்கான வன்முறைகள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூர்ந்துமுதல் முறையாக இங்கிலாந்தில் வெள்ளைப் பட்டி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.


எமது நாட்டிலும் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் பெண் ஆண் எனும் ஏற்றத்தாழ்வுதொடர்பாகவுள்ள வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டபெண்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் ணெ;களுக்கெதிரான வன்முறையை எதிர்க்கும் ஆண்களைஇணைத்துக் கொள்வதற்கும் இன்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தக்க ஆலோசனை சேவைகளை மட்டக்களப்பு நகரில்பன்சாலை வீதி மனித உரிமைகள் இல்லம், போதனா வைத்தியசாலை, காவியா சுய அபிவிருத்திபெண்கள் நிலையம் மற்றும் சின்ன உப்போடை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் பெறமுடியும்.