கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற சமூகமட்ட குழுக்களை வலுவூட்டல் செயலமர்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்ட சமூகமட்ட குழுக்களை வலுவூட்டும் செயலமர்வு நேற்று(24) செவ்வாய்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

UNDP நிறுவனத்தின் அனுசரணையுடன் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தினால் ஏற்பாடு செய்து இடம்பெற்ற இச்செயலமர்வில் அமைப்பின் யாப்புமுறை, கூட்டக்குறிப்பு எழுதுதல், கணக்கு வைப்புமுறை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது சமூகமட்ட குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.