மட்/மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் வே.ஜெயரெத்தினம் காலமானார்

(கிருதஞ்ஞன்)
கடந்த சில தினங்களாக சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மட்/
மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் வே.ஜெயரெத்தினம் இன்று சிகிச்சை பலனின்றி காலாமானார். இவரின் பூதவுடல் நாளை 24.11.2015 ஆம் திகதி அன்னாரின் இல்லத்தில் இருந்து மண்டூர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.
இவரது இறப்பினையிட்டு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள்; தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.