வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம மட்ட முதியோர் அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டம்

(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட கிராமமட்ட முதியோர் அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கு சமூகசேவை திணைக்களத்தால் பயிற்சி மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடாத்தப்பட்டது.
சமூகசேவை உத்தியோகத்தர் ஜனாப் அ.நஜீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் செல்வி.டிலானி, பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜனாப் ஜனாப். மஜீத் ஆகியோர் வளவாளர்காளக் கலந்து கொண்டனர். முதியோர் அமைப்புக்களுக்கான ஆவணங்களை பேணுதல், கணக்குப் பதிதல், அறிக்கையிடுதல், மழைகாலங்களில் முதியோர் எதிர்கொள்ளும் தொற்றா நோய்கள், சுகாதாரப் பிரச்சினைகள் அவற்றிற்கான தீர்வுகள் சம்பந்தமாகவும் விளக்கமளிக்கப்பட்டது.  சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.க.ஜெகதீஸ்வரன், மாகாண முதியோர் சம்மேளனத்தின் தலைவர் திரு.க.நடேசன் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.