(ஷமி.மண்டூர்) கடந்த சிலநாட்களாக திடீர் சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த அமரர் வே.ஜெயரெட்ணம் அதிபர் அவர்களின் இறுதி அஞ்சலி இன்று 24 செவ்வாய் நடைபெற்றது.
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்ற சமயக்கிரிகைகளின் பின்னர் அவர் இதுவரைகாலமும் கடமைபுரிந்த மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலயத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரங்கல் உரையின் பின்னர் மண்டூர் இந்து மயானத்தில் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க 5.30 மணியளவில் அன்னாரின் உடல் அக்கினியுடன் சங்கமமானது.
அமரர் வே. ஜெயரெட்ணம் அதிபர் அவர்கள் தனது வாழ் நாட்களில் கல்வித்துறைக்கும் மட்டுமல்லாது. மட்டக்களப்பு மண்டூர் பிரதேசங்களில் சமய,கலாச்சார விளையாட்டு பணிகளில் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரு மனிதன். இன மத உயர் தாழ்வு பேதங்கள் இன்றி சேவை செய்தவர் இவர். இவரின் மரணச் செய்தி கேட்டு மட்டு,அம்பாரற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி சென்றனர்.