பல்தேவைக்கட்டிடம் திறந்து வைப்பு

(படுவான் பாலகன்) பல ஆண்டுகளாக நிலவி வந்த பெரும் குறைபாடான பல்தேவைக்கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கெவுளியாமடு கிராமத்தில் புதிதாக பல லட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்ட பல்வேறு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்த கட்டிடம் இன்று மக்களின் பாவனைக்கு திறந்து கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கெவுளியாமடு  சுமத்ராராமய விகாரதிபதி,  மட்டக்களப்பு மாவட்ட UN HABTTAT  நிறுவன பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கிராம உத்தியோகத்தர், பொதுச்சுகாதார மாது,  மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  வக்கல சியாபா படைப்பிரிவின் பொறுப்பதிகாரி, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.