இலங்கை திறந்த பல்கலைக் கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு

(சிவம்)

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று  (29) சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இளைஞர் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் டிப்னோமா, முன்பள்ளிக் கல்வி உயர் சான்றிதழ், முன்பள்ளிக் கல்வி, தொழில்சார் ஆங்கிலம், அடிப்படை ஆங்கிலம்,  சிறிய வியாபார முகாமைத்துவமும் மற்றும் தொழில் நடத்துனர்களும், கல்விப் பயிற்சி சார் ஆங்கிலம், அடிப்படை சிங்களம், அடிப்படை தமிழ், சமூக விஞ்ஞானம் துறைகளில் சித்தி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் விஞ்ஞான அடிப்படை சான்றிதழ் துறைகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்புகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் , நாவல திறந்த பல்கலைக் கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பி.சி.பி. ஜவ்பர், மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் எந்திரி ஏ.டி. கமலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.