விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்  உள்ள பாடசாலை கல்வியை தொடருகின்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று(01) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. 

பிரதேச சமூகசேவை திணைக்களத்தினால் அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்விபயிலும் 15மாணவர்களுக்கே குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதனை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் வித்தியாலய ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து வழங்கி வைத்தனர்.