செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு பா.உ ச.வியாளேந்திரன்(அமல்) விஜயம்

(சுபஜன்)
இன்று (1) காலை செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தீடீர் விஜயம் மேற்கொண்ட பா.உ ச.வியாளேந்திரன்(அமல்) அப் பாடசாலை மாணவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். பாடசாலையை மற்றும் பாடசாலைச் சூழலையும் பார்வையிட்ட பா.உ பாடசாலையில் தேங்கியுள்ள வெள்ளநீரை தடுப்பதற்கும், பாடசாலைக்கு மாணவர்கள் வந்து செல்லும் வீதியை புனர்நிர்மானம் செய்வதற்கும் பிரதேசசபை செயலாளருடன் உடன் தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாடசாலைச் சமூகம் பா.உ ச.வியாளேந்திரன் (அமல்)அவர்களுக்கும் பிரதேசசபை செயலாளர் மற்றும் பிரதேச சபை ஊழியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.