‘‘மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்றவர்களை நாம் கௌரவிப்போம்’ -வாழ்வின் உதயம் அமைப்பின் தலைவர் சி. பரமானந்தம் -

(ஜெ.ஜெய்ஷிகன்)
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வாழ்வின் உதயம் அமைப்பினால் நடைபெற்ற விழா அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பேத்தாழை குகநேசன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பை உருவாக்குவதிலும் அதனை வளர்த்துக் காப்பதிலும் உந்து சக்தியாக இருந்த அர்ப்பணிப்போடு சேவையாற்றிய அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் நினைவுச் சின்னங்கள் வழங்கிபொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தலைவர் சி.பரமானந்தம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டவர்களை படங்களில் காண்க.