மட்டக்களப்பு திருமலை வீதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மலசலகூட அறையொன்றில் உருக்குளைந்த நிலையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று 03-02-2016 புதன்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.