சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சாதனை

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஜூட் தவசீலன் என்சலேட்டா எனும் மாணவி அகில இலங்கை ரீதியில் 2015ம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில் 2ம் நிலையினை பெற்று கல்லூரிக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.


புனித சிசிலியாஸ் தேசிய பாடசாலையின் 2015ம் ஆண்டில் தரம் 9இல் கல்வி கற்ற என்சலேட்டா வலயமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகி 2015 டிசம்பர் மாதம் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்று கொண்டார்.

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியினையே தனது புதிய கண்டுபிடிப்பாக இவர் படைத்திருந்தார்.