கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிபெற்று சாதனை

(ஜெ.ஜெய்ஷிகன்)
மாவட்ட அரச திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றி பெற்று  வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

வாழைச்சேனை பொது மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணியும், மூன்றாம் இடத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலக அணியும் பெற்று கிண்ணங்களை தமதாக்கிக் கொண்டது.
உடல், உள ஆரோக்கியம் வாழ்நாளை அதிகரிக்கும் என்ற தொனிப் பொருளை மையமாக வைத்தே இச் சுற்றுப்போட்டி நடைபெற்றதும், கடந்த 04.02.2016ஆம் திகதி தொடக்கம் 12.02.2016ஆம் திகதி வரை நடாத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பிரதேச செயலாளர் திருமதி.தெட்சண கௌரி தினேஷ், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சசிக்குமார், வேள்ட் விசன் முகாமையாளர் ரணில் ஆகியோர் வெற்றிக் கிண்ணங்கள், பணப்பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிப்பதனையும் வெற்றி பெற்ற அணியினர் குதூகலிப்பதையும் படங்களில் காண்க.