மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பஸ்சில் யானை மோதியதில் யானை இறப்பு

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் பஸ் ஒன்று யானையில் மோதியதில் யானை இறந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (08.02.2016) இரவு 08.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் 116ம் மைக்கல்லுக்கு அருகில் புனானை பிரதேசத்தில் வைத்து வீதியை குறுக்கருக்க முயன்ற யானையில் மோதுன்டதில் யானை உயிர் இழந்துள்ளதுடன் பஸ்ஸின் சாரதியும் பிரயானி ஒருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


உயிர் இழந்த யானை எட்டு வயது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்டதாக இருக்கும் என்று வனஜீவராசிகள் பாதுகாப்;பு திணைக்கள கிரான் காரியாலய உதவி சுற்றுவட்ட பாதுகாவலர் அஜந்த பிரியானந்த தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.