இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகரின் மகனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.