செல்லத்துரை ஐயாவின் இழப்பு; சிறந்ததோர் வழிகாட்டியை தொலைத்து விட்ட உணர்வை எம்முள் ஏற்படுத்தியுள்ளது - ஞா. ஸ்ரீநேசன்



பூ.ம.செல்லத்துரை அவர்களின் அமரத்துவ செய்தியறிந்து  பாராளமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபச்செய்தி.

எமது தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் ஸ்தாகத் தலைவர் கலாபூசணம் பூ.ம.செல்லத்துரை ஐயாவின் இழப்பு நிச்சயம் எம்மால் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். சிறந்ததோர் வழிகாட்டியை தொலைத்து விட்ட உணர்வு எம்முள் இன்று..
இப் புனிதரின் ஆத்ம சாந்திக்காக வேண்டிக்கொள்வோம்.!

தமிழனாய் பிறந்தீர்கள்..
தமிழரசுக் கட்சியை வளர்த்தீர்கள்..
தன் மானம் இழக்காமல் 
தடைகளை கடந்தீர்கள்..
தமிழில் ஆய்வுகளை
தயக்கம் இன்றி தந்தீர்கள் - இறுதிவரை
தாய் மண்ணிலேயே
தமிழ் பற்றுடன் வாழ்ந்தீர்கள்..
தமிழர்களாக வாழ்ந்த நாங்கள்
தற்பெருமை கொள்கிறோம்
உங்களைப் போன்ற தலைவர்கள்
எம் மண்ணில் வாழ்ந்ததனால் ..
அன்றும்.. இன்றும்.. என்றும்..
விலை போகாத தமிழனாய் வாழ்ந்து
தமிழர் மனங்களில்
விதைக்கப்பட்டுள்ளீர்கள்..
நீங்கள் மறைந்தாலும்
மறைக்க முடியாத
மறக்க முடியாத
மாமனிதர் ஆகியுள்ளீர்கள்..
உங்கள் சுவடுகளை
எம் சந்ததியினர்
பின்பற்றுவார்களாக..