கலாபூசணம் செல்லத்துரையின் பூதவுடலுக்கு அரசியல் மற்றும் பல்துறை சார்ந்தோர் இறுதி அஞ்சலி


(சிவம்)

அரசியல் ஆய்வாளரும், பத்தி எழுத்தாளராரும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த பூ,ம. செல்லத்துரையின் புதவுடலுக்கு அரசியல் மற்றும் பல்துறை சார்ந்தோரால் இன்று வெள்ளிக்கிழமை (12) அன்னாரின் பெரியபோரதீவு இல்லத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டு பொறுகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், கல்வி சார் சமூகத்தினர், பொது அமைப்புக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளையினர், மட்டக்களப்பு தமிழ்ச்; சங்கத்தினர், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், மா. நடராஜா, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராஜசிங்கம் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.