கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரியில் கைக்குண்டு மீட்பு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தின் சூனையன்குடா எனும் இடத்தில் களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று இன்று(12) வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிலாழி ஒருவர் செங்கல்வெட்டுவதற்காக களிமண்ணை கொத்தியபோது குறித்த கைகுண்டு களிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் குறித்த இடத்திற்கு சமூககொடுத்து விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டனர்.