அதிபர் சேவை தரம் iii பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 90க்கு மேற்பட்டவர்கள் சித்தி

(படுவான் பாலகன்) கடந்த வருடம் இடம்பெற்ற அதிபர்சேவை தரம் - 111க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 90க்கு மேற்பட்டவர்கள் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகி இருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் 4431பேரை தெரிவு செய்வதற்காக குறித்த போட்டிப்பரீட்சை கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.