பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்

திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியில் பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபர் ஒருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ஹயான் மீ ஹககே வியாழக்கிழமை (11)உத்தரவிட்டார்.

 இந்திவெவ, மகாசேனபுர பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.கபில ரத்னாயக்க (வயது 39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


 புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாசேனபுர பகுதியில் குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.
 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ்  நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.