தரம் 7 மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் ! மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில்  கடமை புரியும் ஆசிரியரினால் தாக்கப்பட்ட  தரம் 7    மாணவன்  ஆரையம்பதி   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் பெற்றோர் இல்லாததால்   அம்மம்மாவின் பராமரிப்பிலே வளர்கிறான் .

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது .

செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலையில் இரு மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர் . இதன் போது  ஒரு மாணவன் அடிக்க குறித்த  மாணவன்   மண்ணை அள்ளி வீசியுள்ளார்.
இதனை கண்ட ஆசிரியர்  மாணவனை கூப்பிட்டு இரு கன்னத்திலும் அறைந்ததுடன் , மூங்கில் தடியினாலும்  அடித்துள்ளார்  இதன்போது
மாணவனின் உடலில் தழும்பு உள்ளதுடன்  காலில் காயமும் ஏற்பட்டுள்ளது .

 அதே பாடசாலையில் கடமை புரியும் ஆசிரியை ஒருவர் மாணவனை எழுப்பி  தண்ணீரால் முகத்தை கழுவி  சித்தாலேப  பூசியுள்ளார்.
இவ்வாறு சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார் .