தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

( R.SAYAN  )  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த  இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு  திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர்   எஸ்.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் , கௌரவ அதிதியாக திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிரதராஜன் மற்றும்   திருக்கோவில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், திருக்கோவில் வலய பாடசாலை அதிபர்கள், திருக்கோவில் வலய ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் ஆகியோரும்   கலந்து கொண்டனர்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த வருடத்துக்குள்; தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை தான் எடுக்கவுள்ளதாக    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது உரையின் போது தெரிவித்தார்.
இளங்கோ இல்லம் முதலாம் இடத்தினையும் , கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தினையும் , வள்ளுவர் இல்லம் மூன்றாம் இடத்தினையும் தட்டிக்கொண்டது.