உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

 தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு 07 மணியளவில் உழவு இயந்திரமொன்று, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த உழவு இயந்திரம்,  உயிராபத்தைத் தவிர்க்கும் பொருட்டு சடுதியாக திசை திருப்பும்போது வீதியோரமாக நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதியதுடன் ,வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு பாய்ந்தது.

இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணைகளை  திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.