கிழக்கு மாகாணத்தின் தேமதுரத்தமிழோசை ஓலிக்கும் கோவிலும் சுனையும் கடலும் சேர்ந்த
மட்டுமாநகரின் வடபால் புன்னைச்சோலை எனும் பூம்பொழில் தன்னுள்ளே அருட்சக்தியாக வீற்றிருந்து.வேண்டும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்
நிகழும் துர்முகி வருடம் வைகாசி 23ம் நாள் (05/06/2016) ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசி 28ம் நாள் (10/06/2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ மிதிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெறும்.
08/06/2016 புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதி வலமாக இடம்பெறும்.
பகல் பூசை தினசரி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும்.
பக்த அடியார்கள் திரளாக சமுகமீந்து வேண்டுவோர்க்கு வேண்டுவது நல்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருள்பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர்.