கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில் அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்

(கதிரவன்  )

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடந்த வாரம் 20.05.2016 சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றவைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கடற்படை அதிகாரி  ஒருவரை திட்டியுள்ளார்.
தேசத்தின் வெற்றிக்காக உழைத்த வீரர்கள் முதலமைச்சர் அவமானம் செய்துள்ளார். முதலமைச்சரின் இச்செயலைக்கண்டித்து  திருகோணமலை பன்சாலை   ஒன்றிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை  இன்று சனிக்கிழமை 28.05.2016 மதியம் 2.00 மணிக்கு  திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தின் முன்னால் நடத்தினார்கள்.

இதில் பொது அமைப்புகளும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிரான கோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி இருந்தனர்.

 முதலமைச்சரின் கொடும்பாவி ஒன்றும ;எரிக்கப்பட்டது.