இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர்


மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷட கபடி வீரர்களுள் ஒருவரும் ரூபவ் முண்னணி கபடி பயிற்றுவிப்பாளராகவும் திகழும் துரைச்சாமி மதன்சிங் அவர்கள் 3வது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும்
இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான ஆசிய circle  கபடி சுற்றுப்போட்டியானது இம்மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை

(May 2 nd to 9 th , 2016) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணியானது   (01.05.2016) இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்தவகையில் இவ்;வணியில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் வீரரும் எம்மண்ணை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விடையமாகும்.

ரி. மதன்சிங் அவர்கள் முதலாவது ஆசிய   கபடி போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்டதுடன்அப்போட்டித்தொடரில் இலங்கை அணி 3ம் இடத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்;. அத்துடன்
சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர் மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில்பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மண்ணிற்கும்ரூபவ் கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமை தேடித்தந்தவருமாவார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டிற்காக அhப்பணித்துள்ள இவர் இப்போட்டிகளில் பிரகாசித்து அணிக்கும்   நாட்டிற்கும்  மண்ணிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.