கணவன் அடித்துக்கொலை; மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

(ஷமி.மண்டூர்) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த சீ.மோகன்(46) மற்றும் அவரது மனைவி இராஜேஸ்வரி ஆகிய இருவரும் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் புதன் (25) மாலை வேளை நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெதிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது களுதாவளை கிராமத்தில் இனம் தெரியாத நபர்களினால் தடிகள்,இரும்புக்கம்பிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய மோகன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இவரது மனைவி இராஜேஸ்வரி(44) அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில்  களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்களை பொலிசார் கைதுசெய்துள்ளதாகவும். பொலிசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.