கிரான் பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு


மகளிர் தினத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு நேற்று 05.05.2016 ஆம் திகதி காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறந்த மூன்று பெண்மணிகள் கௌரவிக்கப்பட்டதோடு மகளிர் சங்கங்களை சேர்ந்த சிரேஷ்ட பத்து பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு அகம் நிறுவனம் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் ஆகியோரது பங்களிப்புடன் இடம்பெற்றது.