(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் இனந்தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் புதன்இரவு(04) இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பிரதேச பிரிவிற்குட்பட்ட திக்கோடை 38ம் கிராமத்தின் 5ம் வட்டாரத்தில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டுள்ளது.
திக்கோடை கிராமத்தை சேர்ந்த லோகிசன் என்பரிவன் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் 38ம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு நேற்றிரவு சென்று வயல்வேலைகளை நிறைவு செய்து விட்டு வருகைதந்து மோட்டார் சைக்கிளை பார்த்தபோது உரிய மோட்டார் சைக்கிள் காணதா நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சற்று நேரத்தின் பின்னர் 38ம் கிராமத்தின் 5ம் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் எரிவதை கண்ட கிராமவாசிகள் பகுதி கிராமசேவையாளருக்கு தகவல் அறிவித்ததாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
படங்கள் : திலக்சன்