மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நீரும் தொழிலும்"எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

(க.விஜயரெத்தினம்)  சர்வதேச நீர்தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு அலுவகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட "நீரும் தொழிலும்"எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 3.5.2016காலை  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளரும்,பொறியலாளருமாகிய டீ.ஏ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளரும், பொறியியலாளருமான எம்.சுதர்ஷன்,அதிபர் விமல்ராஜ்,பிரதி அதிபர் கே.பாஸ்கரன்,பாராமரிப்பு இயற்றுதல் பொறியியலாளர் எஸ்.எல்.காலீத்தீன்,வடிகாலமைப்
புச்சபை ஊழியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், கலந்து கொண்டனர்.


இதன்போது பல்லூடகத்தின் மூலம் நீர்முகாமைத்துவம்,நீரைக் பெற்றுக்கொள்ளும் வழிகள்,நீர் மாசடையும் முறைகள்,மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்பாவனை செயற்பாடு,மழைநீர் பாவனை,ஆரோக்கியமான நீர்பாவனை,நீரில் காணப்படும் பொருட்களின் பாதிப்புக்கள்,இலங்கை குடிநீர் நியமங்கள்,நீர் நிலைகளை பாதுகாத்தல்,மட்டக்களப்பு நீர் விநியோகமும் பாதிப்புக்களும்,சிக்கனமாக குடிநீரை பாவித்தல்,நிலத்தடிநீர் மாசடையும் முறைகள் என்பது பற்றி தெளிவான விளக்கவுரை வழங்கப்பட்டது.