ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் தின கொடி அணிவிக்கும் நிகழ்வு

தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தின் ஓரங்கமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டுவரும் இளைஞர் கொடி தினத்தினை முன்னிட்டு, ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் தினக் கொடி அணிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் முதலாவது கொடியை பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனுக்கு அணிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாண்டின் தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்களை சிறப்பிக்கும்முகமாக வடிவமைக்கப்பட்ட குறித்த கொடிகள் பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்களால் அங்கு அணிவிக்கப்பட்டன.