மானிய உரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை விவசாயிகள் கவலை தெரிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதங்கள் கடந்த நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய உரத்திற்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நெற்செய்கைக்கான நெற்கள் விதைக்கப்பட்டு இரண்டு தடவைகள் உரம் இடுவதற்கான காலம் சென்றுள்ள நிலையிலும் இன்னும் உரமானியம் வழங்கப்படாமையால் பல்வேறு அசௌரியங்களுக்கு விவசாயிகள் உள்ளாகி உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.


விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பலர் கூலித்தொழில் செய்து வாழ்கின்ற நிலையில் விவசாய மானியமும் இதுவரை கிடைக்காமலிருப்பது சிரமங்களை ஏற்படுத்தியுள்ளாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்பு உரமானியத்திற்கான கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.