கனடாவாழ் தமிழ் உறவினால் பலாச்சோலை கிராம மக்களுக்கு கிணறு

(ரவீ)
வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்களுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்(அமல்) கிணறு ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
கடந்த மாதம் இக் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்களை பார்வையிடுகையில் மக்கள் தமக்கு கிணறு ஒன்றை பெற்றுத்தருமாறு வந்தாறுமூலை பலாச்சோலை கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதக்கமைய இக் கிணற்றை பெற்றுக்கொடுத்தார். இந் நிதியுதவினை கனடிய தேசத்தில் இருந்து வருகைதந்த கனடாவாழ் தமிழ் உறவாகிய திருமதி.ம.புஸ்பலதா அவர்களின் நிதி உதவியுடன் மனித நேயக்கரங்கள் அமைப்பின் அமுலாக்கத்தின் கீழ் இக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.