வாழைச்சேனை சம்பவத்திற்கு கூட்டமைப்பினர் கண்டனம்!

வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ம் திகதி நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டனத்தை தெரவித்துள்ளனர்.

அவர் அந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கையில் நபர் ஒருவர் இடையூறு செய்து வன்முறை ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டார்.


இச் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஒப்பமிட்டு இக் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்கு திசைதிருப்பலாம். எனவே விபரீதமான செயற்பாடுகளுக்கு வழிகோல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றனர்.

(சண் சபா)