இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

(ஷமி.மண்டூர்) மட்/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் 2014/2015ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா (25) புதன் அதிபர் ரகுபதி தலமையில் வித்தியாலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அனைவரும் வரவேற்கப்பட்டபின்னர் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் மற்றும் சிறப்பு அதிதிகளாக வலயக்கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் மட்டக்களப்பு மேற்கு க.சத்தியநாதன்  மற்றும் பட்டப்பின் கற்கையாளரும் இணைப்பாளருமான வர்த்தக முகாமைத்துவ பீடம் கிழக்கு பல்கலைக்கழகம் டாக்டர்.இராஜேஸ்வரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்றைய நிகழ்வின் போது 2015ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் ஆதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.



இன் நிகழ்வில் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராமத்தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்