வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஹேமராஜனின் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வும் இரத்ததான நிகழ்வும்!

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதபாட ஆசிரியர் அமரர் திரு.சி.ஹேமராஜன் கடந்த 22.05.2013 அன்று கடமை நேரத்தில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து  மூன்றாவது நினைவேந்தல் , இரத்ததான நிகழ்வும் கடந்த புதன்கிழமை (25.05.2016) அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் க.பொ.தராதர உயர்தரப் பிரிவு(2016) மாணவர்களால் அமரர் ஹேமராஜன் ஆசிரியரின் நினைவாக “வி குரோ” என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு வருடாவருடம் நலிவுற்ற மாணவர்கள் பத்துப் பேருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

திருமதி.சோபனா ஹேமராஜன் மற்றும் குரக்ஷனா ஆகியோர் அமரர் ஹேமராஜனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறித்த ஆசிரியரின் நினைவு நாளில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் 60 இற்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்ததும் விசேட அம்சமாகும்.