அருள்நேசபுரம் கடுக்காமுனை ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலய வருடாந்த உற்சவம்

மண்முனை வாவியின் மேற்கே வளம் நிறை பட்டிப்பளை பிரதேசத்தில் தென்பகுதியில் நிலவளம் நீர்வளம் மிகுந்த செழிப்புடன் நெல்வயல்கள் கொழிக்கும் கடுக்காமுனை கிராமத்தில் குடிகொண்ட
அருள்மிகு ஸ்ரீ லக்ஸ்மி நாராயணப்பெருமானுக்கு இன்று (06.05.2016) கிரியைகள் ஆரம்பமாகி எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை தீர்த்தம் மற்றும் ஊஞ்சலுடன் இனிதே திருவிழா நடைபெற்று நிறைவடையவுள்ளது. இவ்வுற்சவ காலங்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து பெருமானை தரிசித்து அருள்பெற்றேகுமாறு இறையன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.
சுபம்.