பாடசாலை நேரத்தில் பணியாளர் மீது தாக்குதல் - அரசடித்தீவில் சம்பவம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தில் பணிபுரியும் பாடசாலை பணியாளர் மீது இருவர் தாக்கிய சம்பவம் இன்று(05) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அரசடித்தீவு பாடசாலைக்குள் பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்நுழைந்த இருவர் பணியாளரை தாக்;கியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று(05) 11.30மணியளவில் நடைபெற்றுள்ளது.  

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாக்கப்பட்ட பணியாளர் குறிப்பிட்டார்.