வந்தாறுமூலையில் உழவர் சிலை திறந்து வைப்பு!

(சுபஜன்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட உழவர் சிலையொன்று நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், வைத்திய அதிகாரி, செங்கலடி பிரதேச சபை செயலாளர், வந்தாறுமூலை கிராம சேவகர், பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், வந்தாறுமூலை வாழ் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.