தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் - கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சம்பவம் !

(சுபஜன்)
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் மாணவன் ஒருவர் மீது பல சிங்கள மாணவர்கள் சேர்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவன் கோபாலப்பிள்ளை பிரதாஸ் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு தற்போது செங்கலடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கடந்த மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூறும் பொருட்டு முகப்புத்தகமொன்றில் மே 18 என்று வாசகமிட்ட ஒரு புகைப்படத்தை பதிவுசெய்ததன் காரணமாகவே பல சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து துரித விசாரனையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.