கொக்கட்டிச்சோலையில் 16 வயது சிறுமி கடத்தல்

மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை கடந்த 27 ம் திகதி முச்சக்கரவண்டி  ஒன்றில்  கடத்திச் சென்றுள்ளதாகவும் இதுவரை பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் இன்று புதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


கடந்த மாதம் 27 ம்திகதி கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்தவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்

இருந்தபோதும் சிறுமி கடத்தப்பட்டு இன்றுடன் 7 நாட்களானபோதும் பொலிசார் உரியவரை இதுவரை கைது செய்யவில்லை அதேவேளை சிறுமிக்கு 16 வயது முடிந்தால் ஒன்றும் செய்யமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்து சிறுமியை கடத்தியவரை கைது செய்யததால் கடத்தியவர் அரசியல் வாதி என்பதால் நீதியை செய்யாமல் தமக்க அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் சிறுமியை மீட்டுத்தருமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சம்பவத்தில் சூத்திதாரியான அக்கரைப்பற்று கண்ணகி வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளைகனின் தந்தையான இருதயநாதன் பம்பலப்பிட்டி ஓ.ஜ.சி. என்றழைக்கப்படுபவர்