வாகன விபத்து ! இளைஞன் பலி

சப்னி-

அட்டாளைச்சேனை மீணோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று (28) இடம்பெற்ற வாகான விபத்தில் மோதுண்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்று மாலை மரணித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
குறித்த இளைஞன் அட்டாளைச்சேனை சந்தை பகுதியில் இருந்து பிரதான வீதியால் மீனோடைக்கட்டு பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த டிப்பர் லொறி மோதியதில் பலத்த காயத்திற்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் அக்கரைப்பற்று பொலிசார் லொறி சாரதியை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் தெரிவித்தனர்.

உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


 .