நீதிவான் நீதிமன்றம் முன்னால் சாராயம் குடித்து விட்டு சத்தமிட்டவருக்கு தண்டம்

(எப்.முபாரக்)                   


திருகோணமலை   மூதூர் நீதிவான் நீதிமன்றம் முன்னால் நின்று சாராயம் குடித்து சத்தமிட்ட  நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டப்பணம் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில்  ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை(27) உத்தரவிட்டார். 
                                  

மூதூர்,பாலநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.  குறித்த நபர் மூதூர் நீதிமன்றம் முன்னால் நின்று ஞாயிற்றுக்கிழமை (26) சாராயம் குடித்து சத்தமிட்ட  வேளை மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு  பொலிஸார் குறித்த நபரை கைது (26) செய்து மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மூவாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.